தமிழக செய்திகள்

வீட்டின் பூட்டை உடைத்து 18½ பவுன் நகைகள் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து 18½ பவுன் நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தினத்தந்தி

வி.கைகாட்டி

அரியலூர் புதுமார்க்கெட் தெருவை சேர்ந்தவர் கோபிநாத் மனைவி சுமதி(வயது 46). இவர் நேற்று முன்தினம் மாலை கயர்லாபாத் கிராமத்தில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது மழை பெய்ததால் அங்கேயே தங்கி விட்டு நேற்று காலை வீட்டுக்கு வந்துள்ளார். வீட்டில் வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த சங்கிலி, தோடு உள்ளிட்ட 18 பவுன் நகைகள் திருடு போயிருப்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து சுமதி அளித்த புகாரின் பேரில் கயர்லாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது