தமிழக செய்திகள்

வீட்டின் பூட்டை உடைத்து தங்க,வெள்ளி பொருட்கள் திருட்டு - மர்ம நபர்கள் கைவரிசை

கருமத்தம்பட்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளி பொருள்கள் திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தினத்தந்தி

கோவை மாவட்டம்,கருமத்தம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் சங்கரமூர்த்தி (வயது 49).இவரது சொந்த ஊர் சென்னை.இவர் கடந்த நான்கு வருடங்களாக கருமத்தம்பட்டி பகுதியில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் தங்கி தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் ராகுல் குமார் சென்னையில் வேலை செய்து வருகிரார்.

இந்நிலையில் இவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் விடுமுறை என்பதால் அவரது சொந்த ஊரான சென்னைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்று விட்டனர்.

சங்கரமூர்த்தி கடந்த 24ம் தேதி சொந்த வேலை காரணமாக சென்னைக்கு சென்றுள்ளார்.பின்னர் நேற்று வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மர்ம நபர்களால் வீட்டின் முன்பக்க கதவை உடைக்கப்பட்டு இருந்தது.  இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டினுள் சென்று பார்த்த போது அங்கு இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 1 கிலோ வெள்ளி பொருட்கள், 3 கிராம் தங்கம் மற்றும் ஒரு லேப்டாப் ஆகியவைகளை மர்மநபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

இதனை அடுத்து சங்கரமூர்த்தி கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்