தமிழக செய்திகள்

கொருக்குப்பேட்டையில் பேக்கரி கடையின் பூட்டை உடைத்து பணம் திருட்டு

கொருக்குப்பேட்டையில் பேக்கரி கடையின் பூட்டை உடைத்து கல்லாவில் இருந்த பணத்தை திருடி சென்றனர்.

தினத்தந்தி

கொருக்குப்பேட்டை கார்னேசர் நகர் பார்த்தசாரதி தெருவை சேர்ந்தவர் அப்துல் ரசாக் (வயது 41). இவர் அதே பகுதியில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் வியாபாரத்தை முடித்துக்கொண்டு கடையை மூடி விட்டு சென்றார். பின்னர் கடையின் பின்பக்க பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் கல்லாவில் இருந்த 15 ஆயிரம் ரூபாயை திருடி சென்றனர். இது குறித்து அப்துல் ரசாக் ஆர்.கே.நகர் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்