தமிழக செய்திகள்

பூதப்பாண்டி அருகே கடையின் பூட்டை உடைத்து ரூ.40 ஆயிரம் திருட்டு

பூதப்பாண்டி அருகே கடையின் பூட்டை உடைத்து ரூ.40 ஆயிரம் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

தினத்தந்தி

அழகியபாண்டியபுரம்:

பூதப்பாண்டி அருகே கடையின் பூட்டை உடைத்து ரூ.40 ஆயிரம் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

ரப்பர் சீட் கடை

பூதப்பாண்டி அருகே உள்ள தடிக்காரன்கோணம் பகுதியை சர்ந்தவர் பைஜின். இவர் அந்த பகுதியில் ரப்பர் சீட் வாங்கி விற்கும் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் தடிக்காரன்கோணம் தோமையார்புரம் சர்ச் தெருவை சேர்ந்த பால்தாஸ் (வயது 66) என்பவர் வேலை பார்த்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்த பின்பு பால்தாஸ் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் நேற்று காலையில் பால்தாஸ் கடையை திறக்க வந்த போது ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

ரூ.40 ஆயிரம் திருட்டு

கடையின் உள்ளே சன்று பார்த்த போது பொருட்கள் சிதறி கிடந்தன. மேஜையில் வைத்திருந்த ரூ.40 ஆயிரத்தை காணவில்ல.

இரவு யாரோ மர்ம நபர்கள் ஷட்டர் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பணத்த திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து பூதப்பாண்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடையில் திருடிய மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

கடையில் பூட்டை உடைத்து ரூ.40 ஆயிரம் திருடிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்