தமிழக செய்திகள்

போலி ஆவணம் தயாரித்து ரூ.3 கோடி நிலத்தை விற்ற தரகர் கைது

போலி ஆவணம் தயாரித்து ரூ.3 கோடி நிலத்தை விற்ற தரகரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

சென்னையை அடுத்த புழல் ஆட்டந்தாங்கல் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 54). பாடியநல்லூர் பகுதியில் உள்ள இவருக்கு சொந்தமான ரூ.3 கோடி நிலத்தை சிலர் போலி ஆவணம் தயாரித்து வேறு சிலருக்கு விற்றது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி ஆவணம் தயாரித்து நில மோசடி செய்த நில தரகரான திரு.வி.க நகரை சேர்ந்த ராமைய்யா (73) என்பவரை கைது செய்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து