தமிழக செய்திகள்

ஆரணியில் வியாபாரியை தாக்கிய அண்ணன்-தம்பி கைது

ஆரணியில் வியாபாரியை தாக்கிய அண்ணன்-தம்பியை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கிளாஸ்கார தெருவை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 35), அடகுக்கடை நடத்தி வருகிறார். பாப்பாத்தி அம்மன் கோவில் தெருவில் மெக்கானிக் கடை நடத்தி வருபவர்கள் நரேஷ் (30), கிருஷ்ணதாஸ் (27). இருவரும் அண்ணன்-தம்பிகள். கடந்த செப்டம்பர் மாதம் அருண்குமார் மோட்டார் சைக்கிளை பழுது பார்க்க அவர்களிடம் கொடுத்துள்ளார். அதற்கு ரூ.1,500 செலவாகும் என கூறியுள்ளனர்.

இதனையடுத்து அருண்குமார் ரூ.1,500 கொடுத்துவிட்டு சென்றதாக தெரிகிறது. பின்னர் அவர் மோட்டார் சைக்கிளை எடுக்க சென்ற போது அண்ணன்-தம்பிகள் 300 ரூபாய் தரவேண்டும் என அருண்குமாரிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் பணம் கொடுத்து விட்டேனே என சொல்லி மோட்டார் சைக்கிளை எடுத்து சென்றார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு அண்ணன்-தம்பி இருவரும் மதுகுடித்துவிட்டு அருண்குமாரிடம் 300 ரூபாய் கேட்டு ஆபாசமாக பேசி தாக்கியுள்ளனர். இதுகுறித்து அருண்குமார் கொடுத்த புகாரின் பேரில் ஆரணி நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து நரேஷ், கிருஷ்ணதாஸ் ஆகியாரை கைது செய்தனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்