காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் அடுத்த மொளச்சூர் பகுதியை சேர்ந்த அழகர்சாமி, கட்டிட மேஸ்திரி. இவர் உடன் வேலை பார்த்து வரும் பெண்ணின் 15 வயது மகளுக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்தார்.
இந்த நிலையில் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தாயிடம் கூறி அழுதார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.
இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அழகர்சாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.