தமிழக செய்திகள்

தடையை மீறி எருதாட்டம் - காளைகள் முட்டி10 பேர் காயம்

சேலத்தில் உள்ள ரெட்டிப்பட்டி கிராமத்தில் தடையை மீறி எருதாட்டம் நடைபெற்றது.

தினத்தந்தி

சேலம்,

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே ரெட்டிப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற எருதாட்டத்தைக் காண அருகில் உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான மக்கள் திரண்டு வந்திருந்தனர். காளைகளின் கழுத்தில் கயிற்றை கட்டி, அவற்றின் மீது வண்ணப்பொடிகளை பூசி ஓடவிட்டு எருதாட்டம் நடைபெற்றது.

சீறிப்பாய்ந்து வந்த காளைகளை அங்கிருந்த இளைஞர்கள் துரத்திச் சென்று கட்டுப்படுத்தினர். அப்போது காளைகள் முட்டியதில் 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் காயமடைந்தனர். மேலும் தடையை மீறி எருதாட்டம் நடத்தியதாக 25 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு