தமிழக செய்திகள்

மாட்டு வண்டி எல்கை பந்தயம்

ஆவுடையார்காவில் அருகே மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

தினத்தந்தி

பந்தயம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகே வேள்வரை ஐந்து வேம்பு காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழாவை முன்னிட்டு 4-வது ஆண்டாக மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.

இதில் புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தஞ்சை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 45 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. 2 பிரிவுகளாக நடைபெற்ற பந்தயத்தில் பெரிய மாடு பிரிவில் 10 ஜோடி மாட்டு வண்டிகளும், சிறிய மாடு பிரிவில் 35 ஜோடி மாட்டு வண்டிகளும் கலந்து கொண்டு எல்கையை நோக்கி சீறிப்பாய்ந்தன.

கொடிப்பரிசு

பந்தயத்தில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாட்டு வண்டியின் உரிமையாளர்களுக்கு ரொக்கம் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. மேலும் மாட்டு வண்டிகளை சிறப்பாக ஓட்டி வந்த சாரதிகளுக்கு கொடிப்பரிசு மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.

சாலையில் இருபுறமும் நின்று பந்தயத்தை பொதுமக்கள் கண்டு களித்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஐந்து வேம்பு காளியம்மன் கோவில் இளைஞர் நற்பணி மன்றத்தினரும், கிராம மக்களும் செய்திருந்தனர். 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து