தமிழக செய்திகள்

கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம்

கல்லல் அருகே கோவில் திருவிழாவையொட்டி மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.

காரைக்குடி

கல்லல் அருகே கோவில் திருவிழாவையொட்டி மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.

மாட்டு வண்டி பந்தயம்

காரைக்குடி அருகே கல்லல் ஒன்றியத்திற்குட்பட்ட ஆலங்குடி கிராமத்தில் உள்ள மதகடி நாச்சியம்மன் கோவில் வருடாபிஷேக விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் ஆலங்குடி-மானகிரி சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 33 வண்டிகள் கலந்துகொண்டன. பெரிய மாட்டு வண்டி பந்தயம், சின்ன மாட்டு வண்டி பந்தயம், பூஞ்சிட்டு வண்டி பந்தயம் என 3 பிரிவாக நடைபெற்றது.

முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 9 வண்டிகள் கலந்துகொண்டன. அதில் முதல் பரிசை கூத்தலூர் சாத்தையா மற்றும் வல்லாளப்பட்டி மகாவிஷ்ணு வண்டியும், 2-வது பரிசை நகரம்பட்டி வைத்தியா வண்டியும், 3-வது பரிசை பல்லவராயன்பட்டி இளமாறன் வண்டியும் பெற்றது.

பூஞ்சிட்டு பந்தயம்

பின்னர் நடைபெற்ற சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் 10 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை நகரம்பட்டி வைத்தியா வண்டியும், 2-வது பரிசை தேவாரம் கவுசல்யா வண்டியும், 3-வது பரிசை மேலமடை சீமான்ராஜா வண்டியும் பெற்றது.

இறுதியாக நடைபெற்ற பூஞ்சிட்டு வண்டி பந்தயத்தில் 14 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை பாகனேரி முருகன் வண்டியும், 2-வது பரிசை பனங்குடி சேவியர்தாஸ் வண்டியும், 3-வது பரிசை கல்லல் உடையப்பா சக்தி வண்டியும் பெற்றது. வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. 

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்