தமிழக செய்திகள்

கொட்டாம்பட்டி அருகே மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் - 5 பேர் காயம்

கொட்டாம்பட்டி அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மஞ்சுவிரட்டில் காளைகள் சீறிப்பாய்ந்தன. இதில் 5 பேர் காயம் அடைந்தனர்.

தினத்தந்தி

கொட்டாம்பட்டி, 

கொட்டாம்பட்டி அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மஞ்சுவிரட்டில் காளைகள் சீறிப்பாய்ந்தன. இதில் 5 பேர் காயம் அடைந்தனர்.

மஞ்சுவிரட்டு

கொட்டாம்பட்டி அருகே உள்ள சூரப்பட்டி புதூரில் உள்ள மந்தை முத்தாளம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு இந்தாண்டு நேற்று நடைபெற்றது. மதுரை மாவட்டம் மட்டுமல்லாது அருகிலுள்ள சிவகங்கை, திண்டுக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் சுமார் 200-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டன.

மந்தை சாவடியில் இருந்து கிராமத்தினர் ஜவுளி பொட்டலங்களுடன் ஊர்வலமாக மஞ்சுவிரட்டு நடக்கும் இடத்திற்கு வந்தனர். பின்னர் மஞ்சுவிரட்டு தொழுவத்தில் உள்ள கோவில் காளைக்கு மரியாதை செய்தனர்.

5 பேர் காயம்

அதன்பிறகு ஒவ்வொரு காளையாக தொழுவத்தில் இருந்து அவிழ்த்துவிடப்பட்டன.இதில் சீறிப்பாய்ந்த காளைகளை காளையர்கள் அடக்க முற்பட்டதில் 5 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. பெண்கள், பெரியவர்கள், குழந்தைகள் என ஏராளமானோர் இந்த மஞ்சுவிரட்டை கண்டு ரசித்தனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு