தமிழக செய்திகள்

பாலக்கோடு பஸ் நிலையத்தில்அரசு பஸ் என்ஜினில் திடீரென தீப்பிடித்தது

தினத்தந்தி

பாலக்கோடு:

ஓசூரில் இருந்து சேலத்துக்கு அரசு பஸ் ஒன்று புறப்பட்டு பாலக்கோடு பஸ் நிலையத்துக்கு நேற்று காலை 11 மணி அளவில் வந்தது. அப்போது என்ஜினின் கீழ் பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனை கண்டு சுதாரித்து கொண்ட டிரைவர் உடனடியாக என்ஜினை நிறுத்தினார். இதனை தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தண்ணீரை ஊற்றி என்ஜினில் பிடித்த தீ அணைக்கப்பட்டது. இந்த காட்சி தற்போது சமூக வலைத்தளங்களிலும் பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்