தமிழக செய்திகள்

தமிழகத்தில் வருகிற 15ம் தேதிக்குள் 12,500 ஆக்சிஜன் படுக்கை வசதி - மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் வருகிற 15ம் தேதிக்குள் 12,500 ஆக்சிஜன் படுக்கை வசதி அமைக்கப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறி உள்ளார்.

தினத்தந்தி

சென்னை

ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த பிறகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது;-

தற்போதைய சூழலில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் ரெம்டெசிவர் மருந்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சென்னை கீழ்ப்பாக்கத்தில் மட்டுமே அந்த மருந்து விற்பனை செய்யப்படுவதால் மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். இதன் காரணமாக, தற்போது 5 மாவட்டங்களில் ரெம்டெசிவர் மருந்து விற்பனை செய்ய சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. மதுரை, கோவை, சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் நாளை முதல் ரெம்டெசிவர் மருந்து விற்பனை செய்யப்படும்

ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கூடுதலாக 500 ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. சூப்பர் ஸ்பெஷாலிட்டி கட்டிடம் கொரோனா சிகிச்சை பிரிவாக மாற்றப்பட்டுள்ளது.

பேரிடர் காலத்தில் இருந்து மக்களை காக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம். முழு ஊரடங்கு காலத்திலும் கொரோனா தடுப்பூசி போடப்படும். ஆம்புலன்ஸில் வரும் நோயாளிகளை விரைந்து மருத்துவமனையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். 15ம் தேதிக்குள் 12,500 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் தயாராகிவிடும். தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும் கொரோனா தடுப்பூசி பணிகள் தொடரும் என கூறினார்.

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி