தமிழக செய்திகள்

மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு ரத்து: தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய வேண்டும் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு ரத்து: தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய வேண்டும் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்.

தினத்தந்தி

சென்னை,

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மராட்டிய மாநில அரசால் மராத்தா வகுப்பினருக்கு வழங்கப்பட்ட 16 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்த தீர்ப்பு மராத்தா சமூகத்தினருக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்திருப்பது மட்டுமின்றி, சமூகநீதிக்கு எதிராகவும் இந்திய அளவில் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டில் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், மாநில உரிமைகளைப் பறிப்பதாகவும் அமைந்துள்ளது.

எனவே, ஓ.பி.சி. பிரிவினருக்கு எதிரான இத்தீர்ப்பை எதிர்த்து உடனடியாக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய வேண்டும். அதாவது, புதிதாகப் பொறுப்பேற்கும் தி.மு.க. அரசு இந்தத் தீர்ப்பை எதிர்த்து அதிக எண்ணிக்கை கொண்ட நீதிபதிகளின் அமர்வுக்கு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு