தமிழக செய்திகள்

மறைமலைநகரில் கார்- ஆட்டோ மோதலில் 3 பேர் காயம்

மறைமலைநகரில் கார்- ஆட்டோ மோதலில் 3 பேர் பலத்த காயமடைந்தனர்.

தினத்தந்தி

செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி ஒரு கார் வேகமாக சென்று கொண்டிருந்தது. மறைமலைநகர் சாமியார் கேட் அருகே வரும்போது சாலை சந்திப்பில் ஒரு ஆட்டோ திரும்பியபோது அந்த ஆட்டோ மீது கார் பயங்கரமாக மோதியது. இதில் கார் தலைகுப்புற சாலையில் கவிழ்ந்தது. ஆட்டோவும் சேதமடைந்தது. இதில் காரில் இருந்த 2 பேர், ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேர் பலத்த காயமடைந்தனர்.

இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலையில் தலைகுப்புற கவிழ்ந்து கிடந்த கார், ஆட்டோவை சாலையில் இருந்து அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர். மேலும் இதுகுறித்து கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து