தமிழக செய்திகள்

கஞ்சா செடி வளர்த்த கார் டிரைவர் கைது

கஞ்சா செடி வளர்த்த கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

காஞ்சீபுரம் பல்லவர்மேடு கிழக்கு பகுதியை சேர்ந்தவர் கண்ணுசாமி (வயது 43). கார் டிரைவர். இவரது வீட்டில் கஞ்சா செடி வளர்த்து வருவதாக, பெரிய காஞ்சீபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதையொட்டி இன்ஸ்பெக்டர் விநாயகம் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் மற்றும் போலீசார் அவரது வீட்டுக்கு சென்று சோதனை செய்தனர், அப்போது வீட்டுக்கள் பிளாஸ்டிக் கேனில் கஞ்சா செடி வளர்த்து வந்தது தெரிய வந்தது. போலீசார் கஞ்சா செடியை பறிமுதல் செய்து பெரிய காஞ்சீபுரம் போலீஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றனர். இது தொடர்பாக கண்ணுசாமியை போலீசார் கைது செய்தனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்