தமிழக செய்திகள்

பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து டிரைவர் காயமின்றி உயிர் தப்பினார்

பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்தில் டிரைவர் காயமின்றி உயிர் தப்பினார்.

தினத்தந்தி

விழுப்புரம், 

திருக்கோவிலூரில் இருந்து விழுப்புரம் நோக்கி நேற்று அதிகாலை கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த காரை கண்டாச்சிபுரம் தாலுகா அருமலை கிராமத்தை சேர்ந்த இளையராஜா (வயது 39) என்பவர் ஓட்டிச்சென்றார். இந்த கார் விழுப்புரம் அருகே பெரும்பாக்கம் என்ற இடத்தில் வந்த போது பின்னால் வந்த லாரி ஒன்று அந்த காரை முந்திச்செல்ல முயன்றது.

இதனால் லாரிக்கு வழிவிடுவதற்காக இளையராஜா, காரை இடதுபுறமாக திருப்பினார். இதில் நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர் இளையராஜா காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். விபத்து குறித்த புகாரின்பேரில் காணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு