தமிழக செய்திகள்

வேடசந்தூர் அருகே 15 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து - 2 பேர் படுகாயம்

வேடசந்தூர் அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

தினத்தந்தி

வேடசந்தூர்,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர்-கரூர் ரோட்டில் உள்ள ரங்கநாதபுரம் அருகே சிவகாசியிலிருந்து கரூரை நோக்கி அதி வேகமாக சென்று கொண்டிருந்த கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர 15 அடி பள்ளத்திற்குள் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் காரில் இருந்த 2 பேர் பலத்த காயம் அடைந்தனர். இவர்களை அப்பகுதியினர் மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்த அறிந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்