தமிழக செய்திகள்

விவசாயியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

பாலக்கோடு:

பாலக்கோடு அருகே உள்ள மல்லசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் மாது (வயது47). இவரது அண்ணன் முருகன் (65). விவசாயிகளான இவர்களுக்கு நிலம் தொடர்பாக தகராறு இருந்து வந்தது. நேற்று மாது தனது நிலத்தில் மாட்டுக்கு புல் அறுத்து கொண்டு இருந்தார். அப்போது முருகன், இவரது மனைவி தவமணி (50), மகன் பெரியசாமி (30) ஆகிய 3 பேரும் வந்து மாதுவிடம் தகராறு செய்து தாக்கினர். இதில் படுகாயமடைந்த மாது, பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் முருகன் உள்ளிட்ட 3 பேர் மீதும் பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்