தமிழக செய்திகள்

தேவையின்றி ரெயில் அபாய சங்கிலியை இழுத்த 1,369 பேர் மீது வழக்கு

தேவையின்றி ரெயில் அபாய சங்கிலியை இழுத்த 1,369 பேர் மீது வழக்கு ரூ.7 லட்சம் அபராதம் வசூல்.

தினத்தந்தி

சென்னை,

ரெயில் பயணத்தின் போது பயணிகளின் பாதுகாப்பு வசதிக்காக ஒவ்வொரு பெட்டியிலும் அபாய சங்கிலி பொருத்தப்பட்டிருக்கும். அதனை இழுக்கும் போது ரெயில் டிரைவருக்கு அபாய எச்சரிக்கை எழுப்பப்பட்டு, ரெயிலை நிறுத்தி பாதிக்கப்பட்ட பயணிக்கு உதவ நடவடிக்கை எடுக்கப்படும். பயணிகள் தேவையின்றி ரெயிலின் அபாய சங்கிலியை பிடித்து இழுக்கக்கூடாது என தெற்கு ரெயில்வே பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

பயணிகள் காரணமின்றி ஓடும் ரெயிலின் அபாய சங்கிலியை பிடித்து இழுப்பதை தவிர்க்க வேண்டும். ஆபத்து காலங்களில் மட்டுமே பயணிகள் அபாய சங்கிலியை பயன்படுத்த வேண்டும். தேவையில்லாமல் அபாய சங்கிலியை இழுப்பவர்களுக்கு ரெயில்வே சட்டப்படி ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது.

தெற்கு ரெயில்வேயில் கடந்த 2021-ம் ஆண்டு முதல் தற்போது வரை ஓடும் ரெயிலில் தேவையில்லாமல் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தவர்கள் மீது 1,369 வழக்குகள் போடப்பட்டுள்ளது. இதில் 1,043 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரூ.7 லட்சத்து 11 ஆயிரத்து 66 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து