தமிழக செய்திகள்

தம்பதியை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

வடமதுரை அருகே, தம்பதியை தாக்கிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

வடமதுரை அருகே உள்ள நாகம்பட்டியை சேர்ந்தவர் காளிமுத்து (வயது 55). இவர், அதே பகுதியில் உள்ள சக்திவேல் என்பவரின் வீட்டில் ஆடு, மாடுகளை மேய்க்கும் வேலை செய்து வருகிறார். சக்திவேல் குடும்பத்தினருக்கும், அதே பகுதியை சேர்ந்த அம்மாகுட்டி (60) என்பவரின் குடும்பத்துக்கும் இடையே சொத்து பிரச்சினை காரணமாக தகராறு இருந்து வந்தது.

இந்தநிலையில் கடந்த 28-ந்தேதி காளிமுத்து, தனது மனைவி சின்னபாண்டியம்மாளுடன் (50) நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அம்மாகுட்டி குடும்பத்தினர், காளிமுத்துவை வழிமறித்து நீ சக்திவேல் வீட்டுக்கு வேலைக்கு செல்லக்கூடாது என்று கூறி தகராறு செய்தனர். தகராறு முற்றிய நிலையில் அம்மாகுட்டி தனது குடும்பத்தினருடன் சேர்ந்து காளிமுத்து மற்றும் சின்னபாண்டியம்மாளை தாக்கினார். இதில் காயமடைந்த சின்னபாண்டியம்மாள், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து வடமதுரை போலீஸ் நிலையத்தில் காளிமுத்து புகார் செய்தார். அதன்பேரில் அம்மாகுட்டி, அவருடைய மகன்கள் சண்முகம் (38), காளிதாஸ் (40), உறவினர் பால்ராஜ் ஆகியோர் மீது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்