தமிழக செய்திகள்

அன்புமணிக்கு எதிரான வழக்கு - காவல்துறை பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

அரியலூரில் தனியார் சிமெண்ட் நிறுவனத்தின் சுண்ணாம்புக் கல் சுரங்கத்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக பேட்டி அளித்ததாக பா.ம.க. தலைவர் அன்புமணிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு அரியலூர் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அன்புமணி தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யபட்டது. மனுவை விசாரித்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டதோடு, மனு மீது 4 வாரங்களில் பதிலளிக்கும்படி காவல் துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.

மராட்டியம்: 400 மீட்டர் பயணிக்க அமெரிக்க சுற்றுலா பயணியிடம் ரூ. 18 ஆயிரம் வசூலித்த டாக்சி டிரைவர் கைது

கணவர் 'குரங்கு’ என்று அழைத்ததால் மாடல் அழகி தூக்கிட்டு தற்கொலை

அஜித்பவாரின் மனைவி சுனேத்ரா துணை முதல்-மந்திரி ஆகிறார்?

மத்தியபிரதேசம்: கார் மீது லாரி மோதி கோர விபத்து - 4 பேர் பலி

சத்தீஸ்கரில் 4 நக்சலைட்டுகள் போலீசில் சரண்