தமிழக செய்திகள்

சீமான் உள்ளிட்டோர் மீதான வழக்கு, பொய் வழக்கு; அதனை திரும்பப் பெற வேண்டும் - பெ.மணியரசன்

சீமான் உள்ளிட்டோர் மீதான வழக்கு, பொய் வழக்கு; அதனை திரும்பப் பெற வேண்டும் என பெ.மணியரசன் கூறினார். #Seeman #IPLProtest

சென்னை

தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை சார்பில் திரைப்பட இயக்குநர்கள் பாரதிராஜா, சீமான், கவுதமன் அமீர், மற்றும் கருணாஸ், தமிமூன் அன்சாரி, தனியரசு கூட்டாக பேட்டி அளித்தனர்.

சீமான் கூறியதாவது:-

காவலர்களை நான் தாக்கவில்லை; விலக்கியே விட்டேன் யாரையும் தாக்க வேண்டும் என்பது எனது நோக்கமல்ல. எங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது ரஜினிக்கு வன்முறையாக தெரியவில்லையா? ஆந்திராவில் நடந்த கலவரத்தை, தமிழர்கள் மீதான தாக்குதலை ஏன் கண்டிக்கவில்லை . எங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது ரஜினிக்கு வன்முறையாக தெரியவில்லையா?

கர்நாடகத்தில் பாஜக ஆட்சியின் போதும் தமிழகத்திற்கு முறையாக நீர் திறக்கவில்லை. தமிழ்நட்டிற்கென கொடி கொண்டு வந்தது தேசிய விரோதமல்ல கர்நாடகத்தில் தனிக்கொடி மூலம் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன என கூறினார்.

பெ.மணியரசன் கூறியதாவது:-

சீமான் உள்ளிட்டோர் மீதான வழக்கு, பொய் வழக்கு; அதனை திரும்பப் பெற வேண்டும். சீமானை கைது செய்தால் எங்களையும் கைது செய்ய வேண்டும் என கூறினார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு