தமிழக செய்திகள்

‘நெல்’ நேரடியாக கொள்முதல் செய்யக்கோரி வழக்கு - அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

நெல் நேரடியாக கொள்முதல் செய்யக்கோரிய வழக்கில் அரசு பதில் அளிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் முகமது சைபுல்லா என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தேசிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள், கூலி தொழிலாளிகள் என்று பல தரப்பினர் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகள் விளைவித்த நெல் விற்பனை செய்ய முடியாமல் தவிக்கின்றனர். எனவே, நேரடி கொள்முதல் மையங்கள் மூலம், விவசாயிகளிடம் இருந்து நியாயமான விலையில் நெல் கொள்முதல் செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும். என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் என்.கிருபாகரன், ஆர்.ஹேமலதா ஆகியோர் விசாரித்து, தமிழக அரசு பதில் மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மேலும் விசாரணையை 2 வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு