தமிழக செய்திகள்

அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்த வழக்கு - தீர்ப்பு தள்ளிவைப்பு

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் - ஈபிஸ் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது

சென்னை,

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் - ஈபிஸ் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் இரு தினங்களாக காரசார வாதங்கள் நடைபெற்றன.

இன்று நடைபெற்ற விசாரணையின் போது, போலீஸ் தரப்பில் , தற்போது வரை இரு தரப்பினருக்கும் இடையே சமரசம் ஏற்படவில்லை. சீல் அகற்றினால் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும். மேலும் பிரச்னை ஏற்படலாம் என விளக்கம் அளித்து அறிக்கை தாக்கல் செய்தனர். தொடர்ந்து, தீர்ப்பை நீதிபதி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

SCROLL FOR NEXT