தமிழக செய்திகள்

கால்நடைத்துறை அதிகாரி மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு

தூத்துக்குடியில் கால்நடைத்துறை அதிகாரி மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தினத்தந்தி

தூத்துக்குடி அருகே உள்ள தெய்வச்செயல்புரத்தில் கால்நடை ஆஸ்பத்திரியில் கால்நடைத்துறை உதவி டாக்டராக பணியாற்றி வந்தவர் சத்யா (வயது 29). இவரை கால்நடைத்துறை உதவி இயக்குனராக பணியாற்றி வந்த ஜோசப்ராஜ் என்பவர் சாதி ரீதியாக திட்டி, துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சத்யா தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு ஆணையம் பரிந்துரை செய்தது. இதனை தொடர்ந்து புதுக்கோட்டை போலீசார் உதவி இயக்குனர் ஜோசப்ராஜ் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்