தமிழக செய்திகள்

வேலகவுண்டம்பட்டி அருகேகுடிசையில் திடீர் தீப்பிடித்தது

தினத்தந்தி

பரமத்திவேலூர்

வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள செங்கரப்பாளையத்தை சேர்ந்தவர் கருப்புசாமி (வயது 40). இவர் சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள ஒரு கல்குவாரியில் வேலை செய்து கொண்டு அவ்வப்போது கெங்காரப்பாளையத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்று வந்துள்ளார். இவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று கருப்புசாமி வீட்டில் மீன் பொறிக்க அடுப்பை பற்ற வைத்து எண்ணெயை ஊற்றிவிட்டு வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது அடுப்பில் வைக்கப்பட்டிருந்த எண்ணெய் திடீரென தீப்பிடித்து குடிசை வீட்டின் மேற்கூரையில் தீப்பிடித்து எரிந்துள்ளது. இது குறித்து அங்கிருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த நாமக்கல் தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்து தீ மேலும் பரவாமல் தடுத்தனர். இந்த சம்பவம் குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து