தமிழக செய்திகள்

சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியீடு - மத்திய மந்திரி தகவல்

சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியிடப்படும் என்று மத்திய மந்திரி ரமேஷ் பொக்ரியால் தகவல் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களில், நேற்று முன்தினம் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தேர்வு முடிவு வெளியானது. 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என்று மாணவர்கள் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர்.

அந்த வகையில் தேர்வு முடிவு இன்று (புதன்கிழமை) வெளியாகும் என்று மத்திய மந்திரி ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நேற்று அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு முடிவு நாளை(இன்று) வெளியிடப்பட இருக்கிறது. அனைத்து மாணவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவிக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

மாணவர்கள் தங்களுடைய தேர்வு முடிவுகளை cbs-e-r-esults.nic.in என்ற இணையதளத்தில் சென்று தெரிந்துக்கொள்ளலாம்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்