தமிழக செய்திகள்

தைலாவரத்தில் டிரைவரிடம் செல்போன் பறிப்பு; 2 பேர் கைது

தைலாவரத்தில் டிரைவரிடம் செல்போன் பறித்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த பொத்தேரி பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் வாசு (வயது 25). டிரைவரான இவர் நேற்று முன்தினம் தைலாவரம் ஜங்ஷன் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் இவரை மிரட்டி அவரிடம் இருந்து செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசில் வாசு புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் வாசுவிடம் செல்போன் பறித்த வழக்கில் தைலாவரம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (வயது 21), ஆதனூர் கிராமத்தை சேர்ந்த 18 வயதான ஒருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு