தமிழக செய்திகள்

தபால் நிலையங்களில் ஆதாருடன் செல்போன் எண்ணை இணைக்கலாம்

பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் தபால் நிலையங்களில் ஆதாருடன் செல்போன் எண்ணை இணைக்கலாம் கடலூர் கோட்ட அதிகாரி தகவல்

தினத்தந்தி

கடலூர்

கடலூர் தபால் நிலையங்களின் கோட்ட கண்காணிப்பாளர் கணேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசின் 'பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி' திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகள், பிரதம மந்திரி கிசான் இணையதளத்தில் அல்லது செயலியில் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு வரும் ஓ.டி.பி. அங்கீகாரத்தை பயன்படுத்தி இ-கே.ஒய்.சி. (வாடிக்கையாளர்களின் விவரங்களை அறிதல்) செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக விவசாயிகள் தங்களின் ஆதாருடன் செல்போன் எண்ணை இணைப்பது அவசியமாகிறது. ஆகவே விவசாயிகள் தங்களது அருகில் உள்ள தபால் நிலையங்கள், தபால்காரர், கிராம தபால் ஊழியர் என யாராவது ஒருவரை அணுகி ஆதாருடன் செல்போன் எண்ணை இணைத்து பயன்பெறலாம். ஆதாருடன் செல்போன் எண்ணை இணைத்த பிறகு, https://pmkisan.gov.in/aadharekyc.aspx என்ற PM KISAN இணைய தளத்தில் அல்லது PM KISAN செயலியில் ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணிற்கு வரும் ஓ.டி.பி. அங்கீகாரத்தை பயன்படுத்தி, இ-கே.ஒய்.சி. செய்து கொள்ளலாம். வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறையுடன் இணைந்து கிராமங்களில் நடத்தப்படும் சிறப்பு முகாம்களை பயன்படுத்தியும் இணைத்து கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து