தமிழக செய்திகள்

முதியவர்களிடம் செல்போன்கள் பறிப்பு

மதுரையில் முதியவர்களிடம் செல்போன்கள் பறிக்கப்பட்டது.

தினத்தந்தி

மதுரை,

மதுரை திருநகர் பாரதியார் தெருவை சேர்ந்தவர் கணபதி (வயது 57). சம்பவத்தன்று இவர் பாத்திமா கல்லூரி முன்பு பஸ்சுக்காக காத்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்கள் திடீரென்று கணபதி வைத்திருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பி விட்டனர்.

பின்னர் அவர்கள் தத்தனேரி வழியாக செல்லும் போது கொன்னவாயன் சாலையை சேர்ந்த சேகர் (61) என்பவரிடம் செல்போன் பறித்து கொண்டு தப்பினர். இது குறித்து அவர்கள் இருவரும் செல்லூர் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்