தமிழக செய்திகள்

பொறியியல் படிப்புகளில் சேர விளையாட்டுப் பிரிவின் கீழ் விண்ணப்பத்தவர்களுக்கு இன்று முதல் சான்றிதழ் சரிபார்ப்பு

பொறியியல் படிப்புகளில் விளையாட்டுப் பிரிவின் கீழ் உள்ள 500 இடங்களில் சேர்வதற்கு 2,442 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

தினத்தந்தி

சென்னை,

பி.இ., பி.டெக்., பொறியியல் படிப்பு முதலாம் ஆண்டில், விளையாட்டுப் பிரிவில் உள்ள இடங்கள் மூலம் சேர்வதற்கு விண்ணப்பம் செய்தவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு இன்று முதல் நடைபெற உள்ளது. இந்த படிப்புகளில் விளையாட்டுப் பிரிவின் கீழ் உள்ள 500 இடங்களில் சேர்வதற்கு 2,442 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று முதல் வரும் 7 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மாணவர்கள் தங்கள் அசல் விளையாட்டு சான்றிதழ்களை நேரில் வந்து சரிபார்ப்புக்கு சமர்ப்பிக்க வேண்டும். சி.பி.எஸ்.சி. பாடத்திட்டம் மூலம் படித்த விளையாட்டு வீரர்களுக்கு இரண்டாம் கட்டமாக சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட உள்ளது.

ஈரானை தாக்கும் அளவுக்கு அமெரிக்காவிடம் வலிமை இல்லை; அதனாலேயே... மத்திய கிழக்கு நிபுணர் பேட்டி

மராட்டியம் அர்ப்பணிப்புள்ள ஒரு தலைவரை இழந்து விட்டது: அஜித் பவார் மறைவுக்கு தெண்டுல்கர் இரங்கல்

தமிழகம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல்: 4ம் தேதி தேர்தல் ஆணையம் ஆலோசனை

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை வளர்ச்சிக்கான பார்வை கொண்டது: துணை ஜனாதிபதி

அஜித் பவார் மரணம்; சரத் பவாரை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி