தமிழக செய்திகள்

திருநின்றவூரில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பு

திருநின்றவூரில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் சங்கிலி நகையை பறித்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

தினத்தந்தி

ஆவடி அடுத்த திருநின்றவூர் தாசர்புரம் முதல் மெயின் ரோட்டை சேர்ந்தவர் வனஜா (வயது 60). இவர் தனது தங்கை நிர்மலாவுடன் நேற்று காலை தாம்பரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது பின்னால் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த இருவர் திடீரென வனஜாவின் கழுத்தில் இருந்த 7 பவுன் தங்கச்சங்கிலியை பறித்தனர். இதையடுத்து மூதாட்டி வனஜா சங்கிலியை கையில் பிடித்துக் கொண்டு சத்தம் போடவே சங்கிலி துண்டாகி கையில் கிடைத்த 2 பவுன் நகையுடன் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து வனஜா கொடுத்த புகாரின் பேரில், திருநின்றவூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்குள்ள சி.சி.டி.வி.கேமராவில் பதிவான மர்ம நபர்களின் உருவத்தை வைத்து வலைவீசி தேடி வருகின்றனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்