கோப்புப்படம்  
தமிழக செய்திகள்

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

வேலூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, நீலகிரி, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை ஆகிய 9 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வேலூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கோவை, திருப்பூர், கரூர், மதுரை மற்றும் விருதுநகர் ஆகிய 10 மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்