தமிழக செய்திகள்

புவனேஸ்வரி அம்மன் கோவிலில் சண்டி ஹோமம்

புவனேஸ்வரி அம்மன் கோவிலில் சண்டி ஹோமம் நடந்தது.

திருச்சி கே.கே.நகர் அய்யப்ப நகரில் உள்ள புவனேஸ்வரி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சண்டி ஹோமம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு சண்டி ஹோமம் கணபதி பூஜையுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து நேற்று காலை சிவாச்சாரியார்கள் கொண்ட குழுவினரால் சண்டி ஹோமம் நடத்தப்பட்டது. அம்மனுக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டது. மதியம் பூர்ணாஹூதி நடைபெற்று, தீபாராதனைகள் காட்டப்பட்டன. இதையடுத்து அன்னதானமும் வழங்கப்பட்டது.

SCROLL FOR NEXT