தமிழக செய்திகள்

கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்ட ‘சந்திரயான்-2’ விண்கலம், அடுத்த வாரம் விண்ணில் ஏவப்படும்

கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்ட ‘சந்திரயான்-2’ விண்கலம் அடுத்த வாரம் விண்ணில் ஏவப்படும்; நிலவின் தென் துருவ பகுதியில் இது ஆராய்ச்சி நடத்தும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

தினத்தந்தி

சென்னை,

நிலவின் தென் துருவ பகுதியில் ஆராய்ச்சி செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு இஸ்ரோ மேற்கொண்டுள்ள கனவு திட்டம், சந்திரயான்-2 ஆகும்.

இந்த சந்திரயான்-2 விண்கலத்தை ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் கடந்த 15-ந் தேதி அதிகாலை 2.51 மணிக்கு சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்துவதற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.

கோளாறு சரி செய்யப்பட்டது

இந்த நிலையில் திடீரென அதிகாலை 1.50 மணிக்கு தொழில்நுட்ப காரணங்களால் சந்திரயான்-2 விண்கலத்தை விண்ணில் செலுத்துவது நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது ராக்கெட்டில் ஏற்பட்டிருந்த தொழில்நுட்ப கோளாறை விஞ்ஞானிகளும், என்ஜினீயர்களும் இணைந்து பணியாற்றி சரி செய்து விட்டதாக இஸ்ரோ வட்டாரங்கள் தெரிவித்தன.

இதையடுத்து சந்திரயான்-2 விண்கலத்தை ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் அடுத்த வாரம் (20-ந் தேதி முதல் 23-ந் தேதிக்குள் ஒரு நாளில்) விண்ணில் செலுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் மேலும் கூறின.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை