தமிழக செய்திகள்

சென்னை- நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

பராமரிப்பு பணி காரணமாக சென்னை- நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னை எழும்பூர் பணிமனையில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் கீழ்க்கண்ட ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது.

* சென்னை எழும்பூர்-நாகர்கோவில் வாராந்திர அதிவேக எக்ஸ்பிரஸ் (வண்டி எண்:12667), வரும் 20-ந்தேதி முதல் மார்ச் மாதம் 3-ந்தேதி வரை எழும்பூர்-தாம்பரம் வரை பகுதியாக ரத்து செய்யப்பட்டு, இரவு 7.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும்.

* நாகர்கோவில்-எழும்பூர் வாராந்திர அதிவேக எக்ஸ்பிரஸ் (12668), வரும் 21-ந்தேதி முதல் பிப்ரவரி 26-ந்தேதி வரை தாம்பரம்-எழும்பூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...