தமிழக செய்திகள்

சென்னை சென்டிரல்-சூலூர்பேட்டை இடையே மின்சார ரெயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

சென்னை சென்டிரல்-சூலூர்பேட்டை இடையே மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

கூடூர்-சென்னை இடையே நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்கண்ட ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை சென்டிரல்-சூலூர்பேட்டை இடையே காலை 05.20 மணி, 7.45 மணி, மதியம் 1.15 மணிக்கும், சூலூர்பேட்டை-சென்டிரல் இடையே மதியம் 12.35 மணி, மாலை 6.35 மணி, இரவு 8.45 மணிக்கும், சூலூர்பேட்டை-நெல்லூர் இடையே காலை 07.50 மணி, காலை 10 மணி, மதியம் 3.50 மணிக்கும், நெல்லூர்-சூலூர்பேட்டை இடையே காலை 10.15 மணி, மாலை 6.15 மணிக்கும், கூடூர்-சூலூர்பேட்டை இடையே மாலை 5.15 மணிக்கும் இயக்கப்படும் மின்சார ரெயில்கள் 23-ந் தேதி, 27-ந்தேதி மற்றும் 30-ந்தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

விஜயவாடா - சென்டிரல்(வண்டி எண்12711) இடையே காலை 6.10 மணிக்கு புறப்படும் பினாகினி எக்ஸ்பிரஸ் ரெயில் 23-ந் தேதி, 27-ந்தேதி மற்றும் 30-ந்தேதிகளில் கூடூர்-சென்டிரல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் கூடுர் வரை மட்டுமே இயக்கப்படும்.

சென்டிரல் - விஜயவாடா(12712) இடையே மதியம் 2.10 மணிக்கு புறப்படும் பினாகினி எக்ஸ்பிரஸ் ரெயில் 23-ந் தேதி, 27-ந்தேதி மற்றும் 30-ந்தேதிகளில் சென்டிரல்-கூடூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் கூடுரில் இருந்து மாலை 4.20 மணிக்கு இயக்கப்படும்.       

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை