சென்னை,
பராமரிப்பு பணிகள் காரணமாக காச்சிகுடா–தூத்துக்குடி இடையிலான வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தெலுங்கானா மாநிலம் காச்சிகுடாவில் இருந்து தூத்துக்குடி நோக்கி இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 17615) வருகிற ஜூன் 15ஆம் தேதி முதல் மாற்றிய நேர அட்டவணைப்படி இயக்கப்படும்.
அதன்படி, திருச்சிக்கு மாலை 4.55 மணிக்கு பதிலாக மதியம் 2 மணிக்கே ரெயில் வந்து சேரும். தொடர்ந்து, மதுரைக்கு மாலை 4.20 மணி, விருதுநகருக்கு மாலை 5.03 மணி, தூத்துக்குடிக்கு இரவு 10.30 மணிக்கு பதிலாக இரவு 7.15 மணிக்கே ரெயில் சென்றடையும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.