தமிழக செய்திகள்

சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே ரெயில் சேவையில் மாற்றம்; தெற்கு ரெயில்வே அறிவிப்பு

பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

*தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே இரவு 11.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் நாளை மற்றும் நாளை மறுநாள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

*தாம்பரம்-கடற்கரை இடையே இரவு 9.35,10.45 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்கள் வருகிற 23,24-ந்தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

*தாம்பரம்-கடற்கரை இடையே இரவு 11.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் நாளை முதல் 24-ந்தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

*கடற்கரை-தாம்பரம் இடையே இரவு 9.30,10 மற்றும்11 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்கள் நளை மற்றும் நாளை மறுநாள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

*கடற்கரை-தாம்பரம் இடையே இரவு 11.20,11.40,11.59 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்கள் வருகிற 23 மற்றும் 24-ந்தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு