தமிழக செய்திகள்

பராமரிப்பு பணி காரணமாக திருநெல்வேலி-திருச்செந்தூர் இடையே ரெயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

பராமரிப்பு பணி காரணமாக திருநெல்வேலி-திருச்செந்தூர் இடையே ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை,

பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்க்கண்ட ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திருச்செந்தூர்-திருநெல்வேலி(வண்டி எண்: 06676) இடையே மாலை 4.25 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 18-ந்தேதி திருச்செந்தூரிலிருந்து மாலை 5.15 மணிக்கு 50 நிமிடங்கள் காலதாமதமாக புறப்படும்.

திருநெல்வேலி-திருச்செந்தூர்(06677) இடையே மாலை 6.45 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 18-ந்தேதி திருநெல்வேலியிலிருந்து இரவு 7.10 மணிக்கு 25 நிமிடங்கள் காலதாமதமாக புறப்படும்.

ஈரோடு-ஜோலார்பேட்டை(06846) இடையே மாலை 4.10 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 18-ந்தேதி ஈரோட்டிலிருந்து மாலை 6.10 மணிக்கு 2 மணி நேரங்கள் காலதாமதமாக புறப்படும்.

திருவனந்தபுரம்-குருவாயூர்(16342) இடையே மாலை 5.30 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 18-ந்தேதி திருவனந்தபுரத்திலிருந்து மாலை 6.30 மணிக்கு 1 மணி நேரம் காலதாமதமாக புறப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.     

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்