தமிழக செய்திகள்

தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் மாற்றம்

தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் மாற்றம் செய்யப்பட்டார்.

திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இயங்கி வரும் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டராக ராமராஜன் கடந்த சில ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இவர் தனிப்பிரிவில் இருந்து அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை திருச்சி சரக டி.ஐ.ஜி. பகலவன் பிறப்பித்துள்ளார். இன்ஸ்பெக்டர் ராமராஜன் சொந்த விருப்பத்தின்பேரில் பணிமாறுதலில் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT