திருச்சி,
திருச்சியில் இருந்து பாலக்காடு நோக்கி இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலின் சேவை சில நாட்களில் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி, திருச்சியில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்படும் திருச்சி–பாலக்காடு எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 16843) வருகிற 30-ஆம் தேதி மற்றும் மே மாதம் 1, 2, 4, 5 ஆகிய தேதிகளில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த நாட்களில் ரெயில் திருச்சி–எழமனூர் வரை மட்டும் இயக்கப்படும்.
மேலும், எழமனூரில் இருந்து பாலக்காடு வரை இந்த ரெயில் முன்பதிவில்லா சிறப்பு ரெயிலாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், குறிப்பிட்ட சில நாட்களில் இந்த ரெயில் திருச்சி–முத்தரசநல்லூர் வரை மட்டும் இயக்கப்பட்டு, அங்கிருந்து பாலக்காடு வரை முன்பதிவில்லா சிறப்பு ரெயிலாக இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் இந்த மாற்றங்களை கவனத்தில் கொண்டு பயணத் திட்டங்களை மேற்கொள்ளுமாறு ரெயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இதனை தொடர்ந்து, மதுரை கோட்டத்தில் கொடைக்கானல் ரோடு–அம்பாதுரை இடையே நடைபெறும் பொறியியல் பணிகள் காரணமாக சில ரெயில்களின் சேவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, செங்கோட்டையில் இருந்து காலை 7 மணிக்கு புறப்படும் செங்கோட்டை–மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16848) மே மாதம் 3, 4, 5, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் மாற்றுப்பாதையாக மதுரை, மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி வந்து செல்லும்.
அதேபோல், கன்னியாகுமரியில் இருந்து அதிகாலை 5.15 மணிக்கு புறப்படும் கன்னியாகுமரி–ஐதராபாத் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 17070) மே 8-ஆம் தேதி மதுரை, மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி வந்து செல்லும்.
இந்த தகவலை திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அதிகாரி வினோத் தெரிவித்துள்ளார்.