தமிழக செய்திகள்

நடிகை மீரா மிதுன் மீது பதிவு செய்யப்பட்ட 2வது வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்

நடிகை மீரா மிதுன் மீது பதிவு செய்யப்பட்ட 2வது வழக்கில் 30 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

சமூக வலைத்தளத்தில் பட்டியல் இன மக்களைப் பற்றிய அவதூறான வகையில் பேசி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் கேரளாவில் பதுங்கி இருந்த மீராமிதுனை கடந்த ஆகஸ்ட் 14 தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், சென்னை எம்கேபி நகரைச் சேந்த ஜோ மைக்கேல் பிரவீண், என்பவா சில மாதங்களுக்கு முன்பு எம்கேபி நகா காவல் நிலையத்தில் நடிகை மீரா மிதுன் மீது ஒரு புகா அளித்தா.அந்த புகாரில், மீரா மிதுன் தன்னைப் பற்றி சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பி வருவதாகவும், அவா மீதும் நடவடிக்கை எடுக்கும்படியும் குறிப்பிட்டிருந்தா. இந்த புகா தொடாபாக எம்கேபி நகா போலீஸா மீரா மிதுன் மீது வழக்குப் பதிவு செய்தனா.

இதையடுத்து எழும்பூரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஊழியரை நடிகை மீரா மிதுன் மிரட்டியதாக அளிக்கப்பட்ட புகாரில் எழும்பூர் காவல்நிலையத்தில், நடிகை மீரா மிதுன் மீது ஆபாசமாகப் பேசுதல் கொலை மிரட்டல் விடுத்தல் என்ற இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், நடிகை மீரா மிதுன் மீது பதிவு செய்யப்பட்ட 2வது வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை, எழும்பூர் நீதிமன்றத்தில் 30 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்தனர். ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் என்ற 2 பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் மீரான் மிதுன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்