தமிழக செய்திகள்

தேர் வெள்ளோட்டம்

முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் விழாவினை முன்னிட்டு தேர் வெள்ளோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா வருகிற 28-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. பொங்கல் விழாவை முன்னிட்டு திருத்தேர் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்கான திருத்தேர் வெள்ளோட்டம் நேற்று நடைபெற்றது. முத்து மாரியம்மன் கோவிலில் இருந்து தொடங்கி பஜார் பகுதி வழியாக சென்று மீண்டும் கோவிலில் தேர்நிலை அடைந்தது. இதற்கான ஏற்பாடுகளை நாடார்கள் உறவின்முறை தலைவர் காமராஜன், கோவில் டிரஸ்டி ராஜரத்தினம் செய்திருந்தனர். தேர் வெள்ளோட்ட விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தைப்பூசம்: வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா: பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து

தமிழகம் உள்பட 4 மாநிலங்களில் அரிய வகை காந்தங்களுக்கான வழித்தட ஒப்புதல்: இந்திய தொழில் கூட்டமைப்பு வரவேற்பு

மத்திய பட்ஜெட்: எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி கடும் விமர்சனம்

அனைவருக்குமான வளர்ச்சி என்ற குறிக்கோளுடன் பட்ஜெட் - மத்திய நிதி மந்திரி உரை

மத்திய பட்ஜெட் 2026 - 27 : ஒரு ரூபாயில் வரவு செலவு எவ்வளவு?