தமிழக செய்திகள்

முத்து மாரியம்மன் கோவில் தூக்குதேர் வெள்ளோட்டம்

வளையப்பட்டி முத்து மாரியம்மன் கோவில் தூக்குதேர் வெள்ளோட்டம் நடைபெற்றது.

மோகனூர்

மோகனூர் அருகே வளையப்பட்டியில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தூக்குதேர் நடைபெறுவது வழக்கம். இந்தநிலையில் பழைய தேர் மிகவும் சேதம் அடைந்து இருந்தது. இந்தநிலையில், கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர்பொதுமக்கள் புதிய தூக்கு தேரை செய்து முடித்தனர். தொடர்ந்து புதிய தூக்கி தேரின் வெள்ளோட்டம் நேற்று காலை நடைபெற்றது. முன்னதாக புனிதநீர் கொண்டு நிரப்பப்பட்ட கலசத்திற்கு பல்வேறு சிறப்பு யாகங்கள் செய்து, தேரில் வைத்து கட்டப்பட்டு சாமி தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. வளையப்பட்டியை சேர்ந்த பக்தர்கள் தேரை முக்கிய வீதிகள் வழியாக எடுத்துச் சென்று, மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.

மத்திய பட்ஜெட் விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும், கிராமங்களை வலிமையாக்கும்: பிரதமர் மோடி

மத்திய பட்ஜெட் தாக்கல்: விலை கூடவும் குறையவும் வாய்ப்புள்ள பொருட்கள் எவை எவை?

ஆபரேசன் சிந்தூருக்கு பின்... மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு ரூ.7.85 லட்சம் கோடி ஒதுக்கீடு

மத்திய பட்ஜெட்டில் ஏழைகளுக்கு எதுவுமில்லை: காங்கிரஸ் தலைவர் கார்கே தாக்கு

ரூபாய் மதிப்பை மீட்டெடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: ப.சிதம்பரம் விமர்சனம்