தமிழக செய்திகள்

சாத்தான்குளம் சம்பவம்: தூத்துக்குடியில் காவல்துறை உயர் அதிகாரிகள் ஆலோசனை

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக, தூத்துக்குடியில் காவல்துறை உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

தினத்தந்தி

தூத்துக்குடி,

தென்மண்டல காவல்துறை தலைவராக (ஐ.ஜி) எஸ்.முருகன் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் அளித்த பேட்டியில், லாக்கப் டெத்தைத் தவிர்க்க தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். 1990- களில் நடந்தது போன்ற சாதிய மோதல் தற்போது தென் மாவட்டங்களில் இல்லை. தந்தை.மகன் மரணம் தொடர்பான வழக்கில் சாட்சியம் அளித்த சாத்தான்குளம் பெண் காவலர் ரேவதிக்கு தேவையான பாதுகாப்புத் தரப்பட்டுள்ளது. தேவையான உதவியும் வழங்கப்படும். கைது செய்யப்பட்ட போலீசார், 48 மணி நேரம் காவலில் இருந்தாலே அரசு விதிப்படி சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள். இச்சம்பவத்தை தொடர்ந்து காவல்துறையினருக்கு போதுமான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

இந்நிலையில் தென்மண்டல ஐ.ஜி. முருகன் தலைமையில் காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதில் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஜெயந்த் முரளியும் ஆலோசனையில் பங்கேற்றுள்ளார். மேலும் ஆலோசனை கூட்டத்தில் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, குமரி மாவட்ட எஸ்.பி.க்களும் பங்கேற்றுள்ளனர். மேலும் நெல்லை, மதுரை, திண்டுக்கல் டி.ஜ.ஜி.க்களும் பங்கேற்றுள்ளனர்.

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக 4 போலீசார் கைதாகி உள்ள நிலையில் முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு