தமிழக செய்திகள்

சென்னை: கழிவுநீர் கிணற்றை சுத்தம் செய்த 2 பேர் விஷவாயு தாக்கி உயிரிழப்பு...!

சென்னையில் வீட்டின் அருகே உள்ள கழிவுநீர் கிணற்றை சுத்தம் செய்த 2 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.

தினத்தந்தி

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த பெருங்குடி கல்லுக்குட்டை அன்னை சந்தியா நகரை சேர்ந்தவர் சரவணன்(வயது49). இவர் திருவான்மியூரில் அச்சகம் நடத்தி வருகிறார். இவரது வீட்டின் எதிரே உள்ள சுமார் 7 அடி கொண்ட உரை கிணற்றை சுத்தம் செய்ய முயன்றார்.

நீலாங்கரையை சேர்ந்த காளிதாஸ்(55) என்பவருடன் சேர்ந்து சரவணன் கிணற்றை சுத்தம் செய்தனர். அப்போது கிணற்றில் இருந்து வந்த விஷவாயு தாக்கியதில் காளிதாஸ் மயங்கி கிணற்றில் விழுந்தார்.

இதை கண்ட சரவணன் காளிதாசை காப்பாற்ற முயன்ற போது அவருக்கும் விஷ வாயு தாக்கியதில் கிணற்றில் விழுந்தார். இதை கண்ட அக்கம்பக்கத்தினர் ஒடி வந்து கிணற்றில் விழுந்த 2 பேரையும் மீட்டனர்.

ஆனால் சரவணன், காளிதாஸ் ஆகியோர் விஷவாயு தாக்கியதில் இறந்தனர். இது பற்றி தகவல் அறிந்த துரைப்பாக்கம் போலீசார் விரைந்து வந்து 2 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் துரைப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விஷவாயு தாக்கி 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்