கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

சென்னை சென்டிரல் - கோரக்பூர் இடையே சிறப்பு ரெயில்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

சென்னை சென்டிரல் - கோரக்பூர் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

பயணிகளின் நலனுக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் சென்னை சென்டிரல் - கோரக்பூர் இடையே ஒரு வழி சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை சென்டிரலில் இருந்து இன்று (திங்கட்கிழமை) இரவு 11.20 மணிக்கு புறப்பட்டு உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் செல்லும் ஒரு வழி சிறப்பு கட்டண ரெயில் (வண்டி எண்.06089) புறப்பட்டதிலிருந்து 3-வது நாள் (புதன்கிழமை) இரவு 7 மணிக்கு கோரக்பூர் சென்றடையும்.

இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்