கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி சிறப்பு ரெயில்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

சென்னை எழும்பூரில் இருந்து நாளை மதியம் 1 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரெயில் மறுநாள் அதிகாலை 2.45 மணிக்கு கன்னியாகுமரி சென்றடைகிறது.

தினத்தந்தி

சென்னை,

பயணிகளின் நலனுக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி மற்றும் கோவை - சென்னை சென்டிரல் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கன்னியாகுமரியிலிருந்து இன்று (4-ந்தேதி) இரவு 8.30 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரெயில் (வண்டி எண்.06041) நாளை காலை 9.45 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். மறுமார்க்கமாக, சென்னை எழும்பூரில் இருந்து நாளை (5-ந்தேதி) மதியம் 1 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரெயில் (06042) மறுநாள் அதிகாலை 2.45 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும்.

இதேபோல, கோவையிலிருந்து இன்று (4-ந்தேதி) இரவு 11.30 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரெயில் (06043) மறுநாள் காலை 8.20 மணிக்கு சென்னை சென்டிரல் வந்தடையும். மறுமார்க்கமாக, சென்னை சென்டிரலில் இருந்து நாளை (5-ந்தேதி) காலை 10.20 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரெயில் (06044) அதேநாள் இரவு 8.25 மணிக்கு கோவை சென்றடையும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து